Dienstag, 8. Dezember 2015

ஏனோக்

ஏனோக்

ஆண்டவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஏனோக்கு
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார். ஆதி 5:22-24

என்ன சகோதரனே! வித்தியாசமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களா! ஆம்! வித்தியாசமே. ஏனோக்கு வாழ்ந்த நாளெல்லாம் 365 வருடங்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்த வருடங்கள் 300 மட்டுமே. அதுவரையும் தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவுகள் நமக்கு தெரியாது..
ஆனால் ஒன்றை மிக தெளிவாக பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நாம் அறிந்து கொள்ளலாம். அது என்ன வென்றால், அவனுக்கு 65 வயதில் தான் மெத்தூசலா பிறந்தான். இந்த சம்பவம் ஏதோ ஒரு வகையில் ஏனோக்கை தேவனிடத்தில் நெருங்க செய்திருக்கலாம். அல்லது மெத்தூசலாவின் பிறப்பில் ஏதாவது கடினமான சூழ்நிலை இருந்திருக்கலாம்.. வேறு வழியில்லாமல் அவருடைய பாதத்தில் விழுந்து அவருக்காக வாழ தன்னுடைய வாழ்வை தேவாதி தேவனுக்கு அர்ப்பணித்திருக்கலாம். அதாவது தனது 65 வது வயதில் ஏனோக்கு ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறான். ஆதியில் இழந்து போன அந்த உறவு புதுப்பிக்கப்பட்டு தேவன் அப்பாகவும், ஏனோக்கு பிள்ளையாகவும் மாறுகிறார்கள். (யோவா1:12) ஆம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மெத்தூசலா என்றால் என்ன?
தன்னுடைய மகன் பிறந்ததும் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று www.babynames.com என்று தேட வில்லை. ஏனெனில் ஏனோக்கு மறுபடியும் பிறந்த அனுபவம் இருந்தபடியினால் தேவன் அவரோடுகூட தங்கி, தேவனே தன்னை ஆட்சி செய்கிறார் என்பதை அறிந்திருந்த படியினால், தன்னுடைய எந்த காரியமா யிருந்தாலும் தேவனிடத்தில் கேட்டு தான் செய்வார். ஆகையால் தன் மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேவனிடத்தில் நிச்சயமாக கேட்டிருப்பார். அந்த வகையில் அவர் தேவனுடைய பாதத்தில் காத்திருக்கும் போது தேவன் ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். அதாவது மெத்தூசலாஸ்ரீஅவனது மரணம் அது நிகழும் (நியாயதீர்ப்பு). இந்த வெளிப்பாடு தான் மெத்தூசலா. இப்பொழுது புரிந்ததா?.. ஆம் அப்படியே தேவன் நோவா காலத்திலுள்ள நியாய தீர்ப்பை மெத்தூசலா மூலமாக முன்னறிவித்தார்…
தேவனோடு நடந்தான்
ஆம், இரட்சிக்கப்பட்ட பின் ஏனோக்கு தேவனோடு  நடந்தான். அதாவது இவர் இருதயம் புதுப்பிக்கப்பட்ட படியால், தேவன் இவரோடு பேச ஆரம்பித்தார். இது ரொம்ப முக்கியம்…..
பொதுவாக நாம் தேவனோடு (ஜெபம்) அதிகமாக பேசுவோம்.. ஆனால் அவரை பேச விடுவதே இல்லை. பரிசுத்த வேதாகமம் சொல்கிறது, ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது.(யோவா 10-ம் அதிகாரம்) நாம் அவருடைய சத்தத்தை கேட்கிறோமா! அல்லது ஒருதலை பேச்சு மட்டும் தானா? இங்கே ஏனோக்கும் தேவனும் மாறி மாறி பேசினார்கள். அதுதான் சஞ்சரிப்பு என்று வாசிக்கிறோம். சிலர் தனியாக இருக்கும் போது ஆவிக்குரிய வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் குடும்பம் ஆன பிறகு தேவனோடு பேச நேரம் இருப்பதில்லை. ஆனால் ஏனோக்கோ குடும்ப சூழ்நிலைகளிலும் தேவனோடு அதிக நேரங்கள் செலவளித்தான். அதாவது தேவனுக்கும், குடும்பத்திற்கும் தரவேண்டிய நேரத்தை சரியாக தந்து அங்கேயும் சாட்சியை பாதுகாத்துக் கொண்டான்.
சாட்சியை காத்துக் கொண்ட ஏனோக்கு
தேவனுக்கு பிரியமானவன் என்று ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன் பாகவே சாட்சி பெற்றான். (எபி 11:5).
ஆம்! அவன் தன்னுடைய பேச்சில், நடத்தையில், வாழ்வில் எல்லாவிதத்திலும் தேவனுக்கு பிரியமாகவே இருந்தார். ஆகவே ஏனோக்கு வாழ்ந்த காலத்தில் உள்ள ஜனங்கள் அவனைக் குறித்து இவன் தேவனுக்கு பிரியமானவன் என்று சாட்சி கொடுத்தார்கள்.

இந்த காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இதில் கோட்டையைவிட்டுவிடுகிறோம். பெருமைக்காக நிறைய காரியங்கள் செய்து மக்கள் மத்தியில் ஒரு வேளை நல்ல பெயர் வாங்கலாம்…. ஆனால் தேவன் அந்தரங்க வாழ்வை பரிசோதிப்பாரே.. கவனம் ஐயா! கவனம்.


கர்த்தர் வருகையை முன்னறிவித்தவன்
யூதா 14, 15 வசனங்களில், ஏனோக்கு தான் வாழ்ந்த கால கட்டத்தில் பரிசுத்தவான்களோடு ஏனோக்குக்கு ஐக்கியம் இருந்தது என்று வாசிக்கிறோம். ஆகையால் தேவனுடைய வருகையை அவர் பரிசுத்தவான்களோடு கூட முன்னறிவித்தார். எனவே தன்னுடைய ஜனங்கள் அவபக்தியாய் செய்து வந்த கிரியைகளை உணர்த்தி அவர்களை கடிந்து கொண்டார் அல்லது கண்டித்து பிரசங்கம் செய்கிறவராயும் காணப்பட்டார். எனக்கு அருமையான தேவ பிள்ளைகளே இந்த கடைசிகாலத்தில் சுகபோக உபதேசங்கள் செய்து மாய்மால வார்த்தைகளால் ஒரு கூட்ட ஜனங்களை வஞ்சித்து பரலோகத்திற்கு தூரப்படுத்துகிறவர்களை இனங்கண்டுங்கொள்ளுங்கள். ஆசீர்வாதங்களை மாத்திரம் பேசுகிறவர்கள் தேவ வெளிப்பாடற்றவர்கள் அவர்கள் தேவனோடு சஞ்சரிப்பதில்லை. ஆனால் நோவா எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு தன்னுடைய ஜனங்களின் அவபக்தியை கண்டித்து உணர்த்தினானே, நம்முடைய ஆண்டவர் அன்று ஆலயத்தை வியாபாரக்கூட்டமாக மாற்றும் போது சாட்டை வைத்து அடித்தாரே…
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக் குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிற தற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான் யூதா 1:14,15

உலகத்தோடு ஒத்துப்போகிற தேவ ஜனங்களின் அவபக்தியை தட்டி கேட்க ஆட்கள் இல்லையே என்ற கவலை எனக்கு உண்டு, ஊழியக்காரார்களே! நீங்கள் சிந்தியுங்கள்....
பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஏற்கனவே நாம் கற்றுக் கொண்டது போல பழைய ஏற்பாடு நிஜத்திற்கு நிழலாட்டமாக இருக்கிறது. ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் ஆதாம்(வச5), சேத்(வச8), ஏனோசு(வச11), கேனான் (வச14), மகலாலேயேல்(வச17), யாரேத்(வச20)….. இவர்களெல்லாம் மரித்தார்கள். ஆனால் ஏனோக்கோ உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்டார். இது எதைக் குறிக்கிறது என்றால் உயிரோடே எடுத்துக் கொள்கிறதை குறிக்கிறது.
ஆண்டவருடைய படைப்பில் மரணத்தை அவர் மனிதனுக்கு தீர்மானிக்கவில்லை. இந்த பூமியில் பூரணமாய் வாழ்ந்த பிற்பாடு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளும் விதமாகவே தேவன் மனிதனைப் படைத்தார். ஆனால் அந்த நல்ல திட்டம் ஆதாமுடைய தவறால் முழு மனித சமுதாயத்திற்கும் மரணம் மனிதனுக்கு நேர்ந்தது என்பதை நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. அருமையான வர்களே பரிசுத்தமாய் நீங்களும் நடப்பீர்களா? என்ற ஏககத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன்.
தேவனுடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படு வதற்கு ஆயத்தமாகுங்கள்.
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத் 24: 42-44
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Montag, 7. Dezember 2015

கானான் சபிக்கப்பட்டது ஏன்?



வேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம் என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை இல்லை என்றும் சொல்லக் கூடாது.
வெள்ளத்தினால் உலகம் அழிந்த பிறகு, புதிய பூமியில் முதல் குடும்பமான நோவாவின் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு நாள் நோவா “திராட்சரசத்தைக் குடித்துவெறிகொண்டுதன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்’’ (ஆதி 9:21) என்று வாசிக்கிறோம்.
தேவ கிருபை பெற்ற தேவ மனிதன். புதிய பூமியில் புதிய மனிதன் நோவா, குடித்து, வெறிக்கிறவனா? வேதாகமம் இதை அனுமதிக்கிறதா? என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் எழும்பும். இந்த கேள்விகளுக்கெல்லாம் வேதாகமத்தின் மூலம் கிடைக்கும் பதில் தேவ மனிதன் நோவா குடித்து வெறிக்கிறவன் இல்லை என்பதுதான்.
எப்படி என்றால், நோவா நாட்களில் இரவும் பகலும் 40 நாட்கள் தொடர் மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்ப்பட்டது என்று வேதம் நமக்கு கூறுகிறது.
ஆனால் அதற்கு முன்பாக மழையையே மக்கள் பார்த்தது இல்லை. ஏன் என்றால் மழை பெய்யவில்லை. “அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பிபூமியையெல்லாம் நனைத்தது’’ (ஆதி 2:6) என்று வேதம் கூறுகிறது. நோவா நாட்கள் வரை பூமியில் மழை பெய்யாமல், மூடு பனிதான் பூமியை நனைத்தது.
அதே போல், நோவாவின் நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கிற்கு முன், சீதோஷண நிலை மாறி மாறி இருக்க வில்லை. உலகமெங்கும் ஒரே சீதோஷண நிலைதான் இருந்திருக்கிறது.
நோவாவின் நாட்களில் பெய்த மழைக்கு பின்புதான் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. சீதோஷண நிலை மாற்றத்தை உணராத நோவா எப்போதும் போல் திராட்சைரசத்தைக் குடித்த போது, அதன் தன்மை மாறி, கிரு கிருப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நோவா தெரிந்து அதை குடிக்காமல், தெரியாமலேயே அதைக் குடித்திருக்கலாம். வேதம் எந்த காலத்திலும் மனிதன் தன்னுடைய சுய சிந்தையை இழக்கச் செய்யும் போதை வகைகளை அனுமதிக்க வில்லை. 
சீதோஷண நிலை மாறுபாட்டால் திராட்சைரசத்தில் உண்டான புளிப்பு தன்மை நோவாவுக்குள் போதையாகி, வெறிக்க செய்திருக்கலாம். அந்த நிலையில் சுய நினைவு அற்றவனாக நோவா தான் அணிந்து இருந்த உடை விலகி இருப்பது கூட தெரியாமல் படுத்திருக்கையில்தான்
நோவாவின் இளைய குமாரன் காம், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைக் கண்ட போது அது அவனுக்கு வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்க, தன்னுடைய சகோதரர்களுக்கும் அதை வேடிக்கையாக அறிவித்து, பரியாசம் பண்ணுகிறான்.
ஆனால் நோவாவின் மற்ற பிள்ளைகளோ, அதை பரியாசம் பண்ணாமல், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தை காணக்கூடாது என்பதற்காக பின்னிட்டு சென்று, நோவாவின் நிர்வாணத்தை மூடினார்கள் என்று வேதம் கூறுகிறது.
மனிதனின் சிறு குறைகளையும், மதியீனத்தையும், வேதம் ஏன் சுட்டி காட்டுகிறது என்றால், இப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடாது என்று வலியுறுத்தி திருஷ்டாந்தமாகவே எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செயலுக்கு நவீன கால வேத வியாக்கியானிகள் பல வடிவங்களை கொடுத்து, அருவெறுக்கத்தக்க விதத்தில் வியாக்கியானம் செய்கிறார்கள். எப்படியெனில் நோவாவுடன், ஓரின சேர்க்கையில் காம் ஈடு பட்டிருக்கலாம் ஆகையால்தான் நோவா சாபம் கொடுத்தான். அப்படி செய்யாவிட்டால் சாதாரணமாக நோவா எப்படி சாபம் கொடுத்திருப்பான் என்றும், மறைவானவைகளை கர்த்தர் எங்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், வேதாகம சம்பவங்களுக்கு விரோதமாக வியாக்கியானித்து. விசுவாச வாழ்வில் உள்ள மக்களை வழி விலக செய்ய பிசாசினால் ஆளப்படுகிறவர்கள். அப்படிப்பட்ட  பொல்லாதவர்களை வேத சத்தியங்கள் மூலம் விசுவாச மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அப்படிப்பட்டவர்களை விட்டு விலகவும் வேண்டும்.
இப்படி வேதாகமத்திற்கு விரோதமாக வியாக்கியானம் செய்யும் நபர்கள் தப்பாகவே வியாக்கியானம் செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்னவென்றால், தன் தகப்பனோடு தகாத உறவில் காம் ஈடுபட்டிருப்பானால், அதை எப்படி தன் சகோதரர்களுக்கு அறிவித்திருப்பான். தான் செய்த தவறை ஒருவன் மறைக்கதான் பார்ப்பான். மாறாக அதை வெளிப்படுத்த மாட்டான். எனவே இங்கு தன் தகப்பனின் நிலையை ஏளனம், செய்து பரியாசம் செய்த செயலாகவே வேதம் திட்டமாக விவரிக்கிறது.
எனவே அப்படிப்பட்ட வியாக்கியானங்கள் முழுக்க முழுக்க வேதாகமத்திற்கு புறம்பாகவும், விரோதமாகவும் இருக்கிறது. 
இங்கு தன்னுடைய நிர்வாணத்தைக் கண்டு, மறைக்காமல், அதை தூற்றி மற்ற சகோதரர்களுக்கும் அறிவித்து, தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்க தவறிய கானானின் சந்ததி நோவா மூலம் சபிக்கப்படுகிறது என்பதுதான் வேதாகம உண்மை.
மேலும் காம் செய்த தவறுக்கு, கானான் ஏன் சபிக்கப்பட்டான் என்பது மற்றுமொரு கேள்வி. 
“நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோதுதன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: கானான் சபிக்கப்பட்டவன்தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்’’ (ஆதி 9:24,25)
தனக்கு நேர்ந்தது என்ன என்பதை அறியாமல் நிர்வாணமாக படுத்திருந்த நோவா, எழுந்த பின் தனக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அறிந்து, ஏன் தவறு செய்த தன்னுடைய மகனை சபிக்காமல், கானானை சபிக்க வேண்டும்.
வேதம் காமை அடையாளப்படுத்தும் போது, “கானானுக்குத் தகப்பனாகிய காம்  என்று 22 ம் வசனத்தில் அறிமுகப்படுத்துவதை கவனிக்க வேண்டும். அப்படியானால் அந்த நாட்களில் நோவாவின் பிள்ளைகளும் அவர்களுக்கு பிள்ளைகளும் பிறந்து மக்கள் திரளாகி விட்டார்கள்.
எப்போதும் நாம் வேத வசனத்தை வாசிக்கையில் ஒருசில வேத பகுதியில், ஒரு வசனத்திற்கும், அடுத்த வசனத்திற்கும் பல வருட இடைவெளிகள் இருப்பதை அறிந்து வாசிக்க வேண்டும்.
அப்படிதான் இந்த சம்பவத்திலும் காணப்படுகிறது. நோவாவின் குடும்பம் பேழையை விட்டு இறங்கி பல ஆண்டுகளுக்குப் பின் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
காம் பிள்ளைகள் பெற்று, காமின் மகன் கானானுக்கும் பிள்ளைகள் பிறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆகவேதான் காம் செய்த செயலுக்கு காமை மட்டும் சபிக்காமல், கானான் முதல் அவன் சந்ததி முழுவதையும் நோவா சபிக்கிறான். தகப்பனின் சாபம் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளையும் தொடரும் என்று வேதம் கூறுகிறது. யாத் 20:5, யாத் 34:7) .(ஆனாலும் அந்த சாபமும் பின்நாட்களில் இயேசு கிறிஸ்துவினால் உடைக்கப்பட்டது. அல்லேலூயா)
நோவா கொடுத்த சாபம், தகப்பன் செய்த பாவம், அவன் தலைமுறையை பாதிக்கும் என்பதை காண்பிக்கிறது. ஒருவன் பாவம் செய்தால் அந்த பாவம் அவனோடு முடிந்து விடாமல், எப்படி அவன் சந்ததியே பாதிக்கப்படுகிறது என்பதை அறியத்தருகிறது.
அதேவேளையில்  “சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாககானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்’’ (ஆதி 9:26,27).
தகப்பனுடைய நிர்வாணத்தை பரியாசம் பண்ணாமல், அதை பார்க்க துணியாமல், பின்னாக சென்று மூடிய காமின் சகோதரர்களின் சந்ததி ஆசீர்வாதம் பெறுகிறதையும், ஆசீர்வாதமாக வாழ்வதையும், அது மட்டுமல்ல, உலக இரட்சகரை உலகத்திற்கு கொடுத்த பாக்கியமுள்ள சந்ததியாகவும் விளங்கியதை நாம் மறக்கலாகாது.
மற்றவர்களை இழிவு படுத்தவும், பரியாசம் செய்யவும் முற்படுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் தலைமுறைக்கே சாபத்தை சம்பாதிக்கிறார்கள்.
விளையாட்டைப்போல காம் செய்த தவறு, சரித்திரத்தில் அவன் சந்ததி சாபமாக்கப்பட காரணமாகி விட்ட வரலாறுதான் இவைகள்.   

Freitag, 20. November 2015

கடவுள் பாத்துப்பார்

ஒரு பொண்ணு லவ் பண்ணின, வீட்ல எதிர்ப்பு. அப்புறம் சமாதானமாகி பாக்கணும்னாங்க. பையன வீட்டுக்கு கூட்டி வந்தா.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச ஆரம்பிச்சாங்க.
என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் என்ன?ன்னாரு.
பையன் யோசிக்காம, அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்னான்.

சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு இருக்க?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த, குழந்த குட்டி பணத்துக்கு?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்

பொண்ணு வந்து கேட்டா, பையன் எப்படிப்பா?

ஓ தங்கமான பையன், என்னை கடவுளா நினைக்கிறான்

Donnerstag, 19. November 2015


கெட்டிக்காரன் பொய் எல்லோரிடமும் பலிக்குமா?

காலை வேளையில் ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த சேவல் உற்சாகமாய்ப் பல முறை கூவியபடி இருந்தது.

இதைக் கேட்ட ஒரு நரி அங்கே வந்தது. 

அந்த வேளையில் நரிக்குப் பசியும் அதிகமாக இருந்தது. அந்தச் சேவலைப் பிடித்துச் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டது. ஆனால் அந்தச் சேவல் மரத்தின் மீது இருந்ததால் அதைப் பிடிக்க முடியவில்லை. நரி சேவலைப் பிடிப்பதற்காகத் தந்திரம் ஒன்றைச் செய்தது. 

நரி சேவலைப் பார்த்து, “சகோதரனே! பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் நேற்று ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீ கேள்விப்பட்டாயா? இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கிடையே சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. நீ கீழே இறங்கி வந்தால் நாமிருவரும் இந்த நல்ல செய்தியைப் பற்றிப் பேசலாம்” என்றது.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. இருப்பினும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தொலைவில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. 

இதைக் கண்ட நரி, “என்ன சேவலே, மிகவும் அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே... அங்கே என்ன இருக்கிறது?” என்று கேட்டது. 

அதற்குச் சேவல், “அங்கே சில வேட்டை நாய்கள் வருவது போல் தெரிகிறது. அவைகளெல்லாம் வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனித்தேன்” என்றது.

அதைக்கேட்டதும், அந்த நரிக்கு அச்சத்தில் உடல் நடுங்கிப் போய் விட்டது. அது வேகவேகமாக, “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது. 

சேவல், “நரி நண்பரே, நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். நான் இப்போதே கீழே வருகிறேன். வேட்டை நாய்களைக் கண்டு ஏன் இப்போது பயப்படுகிறாய்? சிறிது நேரத்துக்கு முன்பு தானே நம் அனைவருக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னாய். அப்புறம் ஏன் அச்சப்படுகிறாய்?” என்று கேட்டது. அதைக் கேட்ட நரி, “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி பலர் இன்னும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு இந்த ஒப்பந்தம் தெரியாமல் இருந்தால், என் நிலமை என்ன ஆவது? நான் போகிறேன்” என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 



அதன் ஓட்டத்தைக் கண்ட சேவல் “நரியே, நீ யாரை ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்காரப் பொய்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் என்ன பொய் சொன்னாலும், அது புத்திச்சாலியிடம் வெளிப்பட்டு விடும்.

Samstag, 14. November 2015

திட்டம் முக்கியம்
ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறுந்துடுவாங்க.
ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க. அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு.
போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான்தான் அங்க ராஜா.

கடைசி வீடு

குட்டி கதைஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்தக் கொத்தனார் மிகவும் நேர்த்தியான, அழகான வீடுகளைக் கட்டுவதில் திறமைசாலி. அவர் கட்டும் வீடுகள் உடனே நல்ல விலைக்குப் போயின. பலரும் காத்திருந்து வாங்கினார்கள்.
வியாபாரம் கொழித்தது. தனவந்தரும் கொத்தனாரை நல்ல சம்பளம் கொடுத்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். கொத்தனாருக்கு வயது நிரம்பவும், தான் ஓய்வு பெற்றால் நல்லது என்று நினைத்தார். தனவந்தரிடம் அந்த யோசனையைச் சொன்ன போது அவருக்கும் அது சரியென்றே பட்டது. ஆனாலும் அவர் கொத்தனாரைப் பார்த்து 'தம்பி, நீ எவ்வளவோ செய்து விட்டாய். உனக்கு வாழ்க்கையில் ஓய்வு தேவைதான். எனக்காக இறுதியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்து விட்டுப் போ" என்று கேட்டுக் கொண்டார்.
கொத்தனாருக்கு தனவந்தர் மேலும் வேலை சொன்னது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஓய்வு கேட்டால் வேலை சொல்கிறாரே என்று கோபப் பட்டார். ஆனாலும் பல நாளாக தன்னைப் பார்த்துக் கொண்ட மனிதரிடம் கொண்ட நன்றியறிதலால் ஒன்றும் பேசவில்லை.
வேண்டா வெறுப்பாக அந்தக் கடைசி வீட்டைக் கட்டினார். வழக்கமாக இருக்கும் தரம் அதில் இல்லை. காமா சோமாவென்று இருந்தது.
கட்டி முடித்த அன்று தனவந்தர் வந்தார். வீட்டின் சாவியைக் கொத்தனாரிடம் ஒப்படைத்து, "அப்பா, இந்த வீட்டையே உனக்காகத்தான் கட்டினேன். உன் ஓய்வு காலத்திற்கு இது உதவும். வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
கொத்தனாருக்குத் திடுக்கென்று இருந்தது. நமக்கு என்று தெரிந்திருந்தால் இன்னமும் கவனம் எடுத்து சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று வெகுநேரம் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.
நாமும் நமது இளம் வயதில் நம் யோசனைத் தெரிவுகளாலும் செய்கைத் தெரிவுகளாலும் நமது எதிர்காலம் என்ற வீட்டைக் கட்டுகிறோம். அதில்தான் வாழப் போகிறோம் என்று யோசித்துச் செய்பவர்கள் எப்போதுமே சிறப்பாக வாழ்கிறார்கள்.

Seite 2 von 2

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!"

குட்டி கதைஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "இவர்களைப் பாரேன்! அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் இவர்களுக்கு பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை" என்று ஏளனம் செய்தனர். 
இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர். 

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான். 

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலி பேசாது என்று தந்தை கூறினார். 

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான். 

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர். 

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

Freitag, 13. November 2015

==========
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை
--------------------------------------------------
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,
ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,
‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,
‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts

Mittwoch, 11. November 2015

ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..!
வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..!
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..!
பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க..
இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..!
பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்..
வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..!
சர்வர்.. சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..!
பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..!
சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..!
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..!
சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம்
50 ரூபாய் கொடுத்தார்..!
சர்வர் மேலும் கோபம் ஆனான்..
"யோவ் இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க..! 45 ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..? ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்..! என்று மீதியை கொடுத்தான்..!
பெரியவர் சொன்னார்.. வேண்டாம் தம்பி அது உனக்குத் தான்..! உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை..! என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்..!
சர்வருக்கு கண்களில் நீர்.. ததும்பியது..!
அன்பு நண்பர்களே ..
யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்..என்று நமக்கு தெரியாது..! யாரையும் ஏளனமாக பார்ப்பதும்..பேசுவதும் தவறு..!!

Montag, 9. November 2015

யார் உண்மையான ஏழை...?

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன? என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

இரு தினங்கள் அங்கு தங்கியிருந்து விட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பியதும் ஏழை எப்படி வாழ்கிறான்? எனக் கேட்டான்.

மகன் சொன்னான்;

“அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஒன்றிரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்தக் கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகின்றன. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிதாக இருக்கிறது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்கிறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலைப் பருகிறோம், அவர்கள் உடனடியாகப் பாலைக் கறந்து சாபிடுகிறார்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள். நாம் வீட்டைச் சுற்றிச் சுவர் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது...” என்று

மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது...

Sonntag, 17. Mai 2015

யோபு

யோபு

10 பிள்ளைகள்
70000ஆடுகளும், 
3000ஒட்டகங்களும்,
500 ஏர்மாடுகளும்,
500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 
யோபு‬ ‭1‬:‭3‬ 

பெரிய செல்வந்தர் இவர்

என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும். 
யோபு‬ ‭29‬:‭6‬ 

அது மட்டுமில்லாமல்
அவர் முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன். 
நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது. 
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். 
யோபு‬ ‭29‬:‭12-15‬

மதிப்புக்கும்,மரியாதைக்கும்,கனத்துக்குமுரியவர்

வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள். பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். யோபு‬ ‭29‬:‭8-10‬ 

கர்த்தர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்திருந்தார். 
அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்திருந்தார் 
அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. 
யோபு‬ ‭1‬:‭10‬ 

ஏனென்றால் 

இந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 
யோபு‬ ‭1‬:‭1‬ 

Mittwoch, 8. April 2015

அடோல்ப் ஹிட்லர்

ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 
ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம். விவசாயம், கால்நடை எல்லாமே அழிந்து இரத்தக்கறை படிந்த ஜெர்மன் பூமியை மீட்டெடுத்து பசுமை புரட்சியால் வளப்படுத்தி மக்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஆரம்ப காலத்தில் தன் ஆட்சியால் செய்து வந்தார். 


என்றுமே அமெரிக்காவுக்குக் தலைசாய்த்துச் செல்லும் ஏனைய உலக நாடுகளுக்கு மாறாக தனது தலையை உயர்த்தி, ஜேர்மனியின் செல்வாக்கை உலகின் பக்கம் திரும்பச் செய்தார். தனது ‘நாசி’ படையணியை உருவாக்கி உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யூதர்களை இந்நாட்டில் இருந்து பூரணமாக அழித்துவிடும்படி கட்டளையிட்டார். யூதர்களால்தான் முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படு தோல்வியடைந்தது என்றும் யூதர்களின் பரம்பறையும் செல்வாக்கும் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்கு தடைகளாக இருப்பதாலும் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 


மிகவும் படித்து அறிவுகூர்மையான மக்களாகவும்,  யூதப் பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்ததனாலும் யூதர்கள் பலிவாங்கப்பட்டனர். 1933 தொடக்கம் 1945 காலப்பகுதிவரைக்கும் சுமார் 60 00000 யூதர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். யூதர்களைக் கொள்வதற்காகவே பல வகையான தண்டனை முறைகளையும், சிறைச்சாலைகiளும் நாசி படையணினர் அறிமுகப்படுத்தி இருந்தனர்.

Samstag, 21. März 2015

ஈசாக்


1⃣. பெற்ரோருடைய முதிர்வயதிலே பிறந்தார் ஈசாக்
தாத்தா பாட்டி - பேர்ப்பிள்ளை போல இருந்தனர் 
ஈராக்குக்கு திருமணமாக முன்பே மரித்துப்போனார் தாய் சாராள் 
சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. ஆதியாகமம்‬ ‭23‬:‭1‬ 
தகப்பனுக்கும் வயது சென்று விட்டது 137 வயது
ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். ஆதியாகமம்‬ ‭24‬:‭1
மகன் ஈசாக்கிற்கு பெண் பார்க்கிறார் தகப்பன் 
ஆனாலும் தகப்பனும்,
 மணமகனும் பெண் பார்க்கபோகவில்லை 
கர்த்தரே நேராக நடத்துகிறார் 
Norden syriya.  பதான் அராம்  நாகோரின் ஊருக்கு வருகிறார் ஊழியக்காரன் 
அந்தப் பெண் மகா ரூபவதியும்,    ஆதி 24:16 
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு,    ஆதி 24‬:‭21
இப்படியாக ஈசாக் மகா ரூபவதியும், குணசாலியாண பெண்னை கண்டடைந்தான். 

நீதிமொழிகள் : அதிகாரம் 31 : 10

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
----------------------------------------
2⃣. மலடி
ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; 
ஆதியாகமம்‬ ‭25‬:‭20‬ 
கிட்டத்தட்ட இருபது வருஷம் வாழ்ந்தாகிவிட்டது. 
இப்ப ஈசாக்கிற்கு 59 வயதாச்சு பிள்ளை இல்லை 
மலடியாயிருந்த தன் மனைவிக்காக  கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். 
ஆதியாகமம்‬ ‭25‬:‭21‬ 
கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்
பிள்ளைகள் வளர்ந்தார்கள்   ஒருவன் வேட்டைக்காரன் மற்றவன்   கூடாரவாசி. 
---------------------------------------
3⃣   பஞ்சம் 
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
ஆதியாகமம்‬ ‭26‬:‭1‬
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. 
ஆதியாகமம்‬ ‭26‬:‭2‬ 
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 
ஆதியாகமம்‬ ‭26‬:‭12‬ 
--------------------------------------
4⃣. அவன் பேரில் பொறாமைகொண்டு
அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். 
ஏசேக்கு,  சித்னா   தங்களுடைய தண்ணீர் என்று வாக்குவாதம் பண்ணினார்கள். 
ரெகொபோத்,சேபா.      பெயர்செபா
அபிமெலேக்கு ஈசாக்குடன் உடன்படிக்கை பண்ணிக்கொண்டான். 
------------------------------------
5⃣. ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். ஆதியாகமம்‬ ‭26‬:‭34-35‬ 

யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போன்
ஆதியாகமம்‬ ‭28‬:‭7‬

கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான். 
ஆதியாகமம்‬ ‭28‬:‭8-9‬ 
இஸ்ரவேலின் தகப்பனாய் நல்ல முதிர் வயதிலே மரித்தார். 
---------------
குறிப்புகள் :-  கர்த்தரின் சித்தப்படி திருமணம் 
                     தாய் தகப்பனுக்கு கீழ்படிந்த யாக்கோபின் வாழ்க்கை ஆசீர்வாதமாய். 

Sonntag, 15. März 2015

எலிசா

எலிசா.  
1⃣.   அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். ‭
ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭9‬ 
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭10‬ 
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭11‬ 
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். 
2 இராஜாக்கள்‬ ‭6‬:‭12‬ 
---------
அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். 
மத்தேயு‬ ‭9‬:‭3‬ 
இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? 
மத்தேயு‬ ‭9‬:‭4‬ 
--------
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்
--------
இந்த எலிசா யார்?
பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா.          ஒரு தோட்ட காரன்
1 இராஜாக்கள்‬ ‭19‬:‭19‬ 
இது எப்படி அவனால் கூடும்
2⃣.  தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்    எலிசா இக்கரைப்பட்டான். 
2 இராஜாக்கள்‬ ‭2‬:‭14‬ 
நான் உம்மை விடுகிறதில்லை  அதனால் இந்த முதலாம் அற்புதம். 
----------
  எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். 
  2 இராஜாக்கள்‬ ‭2‬:‭1‬ 
 கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். 
 கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். 
 கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். 
கில்கால் ----- யோசுவா‬ ‭4‬:‭20‬ 
பெத்தேல் ----- யாக்கோபு அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. 
ஆதியாகமம்‬ ‭28‬:‭19‬ 
எரிக்கோ ------- ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 
யோசுவா‬ ‭6‬:‭16‬ 
யோர்தான்.    ----- மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் ஒரு குவியலாகக் குவிந்தது;
யோசுவா‬ ‭3‬:‭16‬
நான் உம்மை விடுகிறதில்லை  அதனால் இந்த முதலாம் அற்புதம்
-------------
3⃣.  எலிசாவன் அற்புதங்கள்.
யோர்தான் நதி இரண்டாக பிளந்தது (2இராஜா.2.13)
எரிகோவின் நீரூற்று சுத்திகரிக்கப்பட்டது. (2இராஜ.2.19)
விதவையின் எண்ணெய் பெருகுகிறது (2இராஜா 4.1).
மரித்த வாலிபன் உயிரோடு எழும்பினான் (2இராஜா. 4.18).
நஞ்சு கலந்த கூழ் சுத்திகரிக்கப்பட்டது (2இராஜா 4.38)
குஷ்டரோகியாகிய நாமான் சொஸ்தமானான் (2இராஜா.5.1)
கேயாசி குஷ்டரோகியானான் (2இராஜா.5.15)
அந்த இரும்பை (கோடாரியை)மிதக்கப்பண்ணி, 2 இரா 6:6
சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு ஆலோசனைபண்ணினான்.‭2 இரா 6‬:‭8

இது எப்படி ????
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான். 
1 இராஜாக்கள்‬ ‭19‬:‭21‬ 

4⃣. நான்கு தேசங்கள் மேல், இஸ்ரவேல், யூதேயா, மோவாப், ஆராம் (சீரியா) ஆகிய தேசங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தினவன்.
மற்றவர்களின் செலவில் தன் சுய காரியங்களைத் சாதித்தவனுமல்ல தன்னை ஐஸ்வரியவனாக்கிக்கொன்டவனுமல்ல மற்றவர்களுக்கு உதவி
செய்திருக்கிறார்.  
90 வயதில் வீட்டில் மரித்திருக்கிறார்
57 வருஷம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் 

5⃣. எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; 
மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். 
2 இராஜாக்கள்‬ ‭13‬:‭20-21‬ 

எளிமையான எலிசா. 
நாகமணியின் காணிக்கை கூட வாங்கவில்லை **

Montag, 2. März 2015

கேள்வி. பதில். ( 2 )

1.  தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;    யார்?
2.  மோசேக்கு எதிர்த்து நின்ற நபர்கள் யார் யார் ? 
3. பிலேயாம் குறித்து எந்த புத்தகத்தில் வாசிக்கலாம் ! 
4  இஸ்ரவேலை சபிக்க பிலேயாமை அழைப்பித்த ராஜா யார்?   
5. தேவனுடைய பெட்டி மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் வீட்டையும் அவனுக்கு     உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்?  

1.  ‭2 நாளாகமம்‬ ‭7‬:‭14‬   வசனம் என்ன சொல்கிறது.?

2. தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும், என்று கூப்பிட்டது யார் ?

3.  8 வயதில் ராஜாவான அந்த ராஜாவின் பெயர் என்ன?  

4.  அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; மாடுகள் இடறினபடியினால்,பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான் அது யார் ?

5. சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்?






Montag, 23. Februar 2015

யாபேஸ்




அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 

யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். 
அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; 
அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 
1 நாளாகமம்‬ ‭4‬:‭9-10‬ 

யாபேஸ் ஜெபம்பன்னுகிறவராக இருந்திருக்கிறார் 
4 காரியத்தைக் கர்த்ரிடம் கேட்கிறார்

1. என்னை ஆசீர்வதியும்
2. என் எல்லைகளை பெரிதாக்கும் 
3. உமது கரம் என்னோடே இருக்கட்டும் 
4. தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்